திலினி பிரியமாலி 12.8 பில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன ; பொலீஸார் தெரிவிப்பு.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 12.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
திலினி பிரியமாலிக்கு எதிராக மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திலினி பிரியமாலி 12.8 பில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன ; பொலீஸார் தெரிவிப்பு.
Reviewed by Madawala News
on
October 27, 2022
Rating: