சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு பாசாங்கு என்றும், நமது நாட்டில் தாய்மார்களின் சோம்பேறித்தனத்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதாகவும் " 9 ஆவது அணி" தலைவர் டான் பிரியசாத் கூறுகிறார்.
இன்றைய தினங்களில் பேசப்படும் போஷாக்குக் குறைபாடு ஏதோ ஒரு தரப்பினரின் போலித்தனம் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த அவர், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
“நாம் போராட வேண்டும் தான்.. வீதியில் இறங்கி போராடி ஒரு ஜனாதிபதியை விரட்டியடித்தார்கள்..
இப்போது ரணில் விக்கிரமசிங்கவை போக சொல்கிறார்கள்
ரணிலை அனுப்பி
விட்டு யாரை கேட்கிறார்கள்..
ஊட்டசத்து குறைபாடு பின்னணியில் இருப்பது யார் ? இது ஒரு நாடகம் என டான் பிரியசாத் மேலும் தெரிவித்துள்ளார்..
எமது நாடு சர்வதேசத்தால் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதுஎன மேலும் தெரிவித்தார்.
வீடியோ 👇🏽
VIDEO » சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு, நமது நாட்டு தாய்மார்களின் சோம்பேறித்தனமே காரணம்.
Reviewed by Madawala News
on
September 26, 2022
Rating: