தன்னுயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் மாயம்.



பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்விக் கற்கும், யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவனே, கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பேராதனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு அவரது நண்பர்கள் அழைப்பை ஏற்படுத்திய போது பதில்
கிடைக்காததால், விடுதி உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மாணவனின் அறை மூடியிருப்பதாகவே விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார். பின்னர் நேற்று (18) மாலை மாணவன் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, மாணவனால் எழுதப்பட்ட கடிதம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தான் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள போவதாக, எழுதப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னுயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் மாயம். தன்னுயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி  வைத்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் மாயம். Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.