பாலுறவு மற்றும் ஆண், பெண் பால் நிலை நோக்கு தனிப்பட்ட கருத்தே ஆகும்... பாலின பாகுபாட்டுக்கு யாருக்கும் உரிமையில்ல ; சஜித்
பாலுறவு மற்றும் ஆண், பெண் பால் நிலை பற்றிய நோக்கு தனிப்பட்ட ஒருவரின் கருத்தே தவிர பாலுறவு மற்றும் பால் நிலையை வைத்து அவர்களை பிரித்து நோ க்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று ஐக்கிய மக்கள் கட்சியின் தல ைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேசிய மறுசீரமைப்பும் எதிர்காலப் பயணமும்” என்ற வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக ஆண் பெண் சமூக நிலை மற்றும் LGBTIQ துறையில் கொள்கை உருவாக்கம் தொடர்பான சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். பாலின அடிப்படையில் ஒருவருக்கொருவர் தீண்டுவதற்கும் ஒருவருக்கொருவர் பாகுபாடு காட்டுவதற்கும் ஒரு கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி எதிரானது என அவர் குறிப்பிட்டார். சில சமயங்களில் மக்கள் மத்தியிலுள்ள அறிவின்மை, சிந்தனை தேக்கம் உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாகவே இவ்வாறான தவறான புரிதல்கள் ஏற்படுவதாகவும் ஒரு சமூகம் முன்னேற்றமடையும்
பொழுது தொழில் நுட்பம்,
பொருளாதாரம் மட்டுமன்றி
அவர்களின் மனப்பாங்கிலும்
முன்னேற்றமடைய வேண்டும்
என்றார்.
பாலுறவு மற்றும் ஆண்,
பெண் பால் நிலை பற்றிய
நோக்கு தனிப்பட்ட ஒருவரின்
கருத்தே தவிர பாலுறவு
மற்றும் பால் நிலையை
வைத்து அவர்களை பிரித்து
நோக்குவதற்கு யாருக்கும்
உரிமை இல்லை என்றும் அவர்
குறிப்பிட்டார்.
அவ்வாறே இன, மத,
குலம் எதுவாக இருப்பினும்
அனைத்து மனிதர்களையும்
ஒரே சமமாக பார்க்க வேண்டும் என்றும் எல்லா வகையான
பன்மைத்துவத்தையும் மதிக்க வேண்டும் என்றும் மேலும்
தெரிவித்தார்
பாலுறவு மற்றும் ஆண், பெண் பால் நிலை நோக்கு தனிப்பட்ட கருத்தே ஆகும்... பாலின பாகுபாட்டுக்கு யாருக்கும் உரிமையில்ல ; சஜித்
Reviewed by Madawala News
on
September 23, 2022
Rating: