VIDEO : ஜோடியாக கொள்ளையடிக்க வந்தவர்கள், இளைஞரை கொலை செய்து விட்டு தப்பியோட்டம்.



கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த ஜோடி பறிக்க முயன்ற சந்தர்ப்பத்தில், கைப்பையை பறிக்க முற்பட்ட நபரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ( ஆண் மற்றும் பெண் ) வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் கைப்பையை பறிக்க முயற்சித்துள்ளனர் .


குறித்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது அந்த பகுதியிலிருந்த வீடொன்றில் வசிக்கும் இருவர், கீழே வீழ்ந்த பெண்ணை பிடித்து வைக்க முயன்ற சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணுடன் வந்த மற்றைய நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
VIDEO : ஜோடியாக கொள்ளையடிக்க வந்தவர்கள், இளைஞரை கொலை செய்து விட்டு தப்பியோட்டம். VIDEO : ஜோடியாக கொள்ளையடிக்க வந்தவர்கள்,  இளைஞரை கொலை செய்து விட்டு தப்பியோட்டம். Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.