வன்முறையை ஊக்குவிப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கவுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இன்னும் 90 நாட்களுக்குள் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளுக்கான தடை முழுமையாக அமுலாகும் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பப்ஜி, டிக்டொக் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா 2020ஆம் ஆண்டு தடை விதித்தது. பின்னர், பாகிஸ்தானும் குறித்த இரண்டு செயலிகளுக்கும் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
பப்ஜி விளையாட்டில் அதிக வன்முறை இருப்பதால் ஆப்கனிஸ்தானில் பப்ஜிக்கு தடை விதிக்கப் பட்டது.
Reviewed by Madawala News
on
September 23, 2022
Rating: