வறுமை காரணமாக மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காயை உட்கொண்ட செய்தி ஆதாரமற்றது ; ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு



வறுமையின் காரணமாக மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காயை உட்கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஆதாரமற்றது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தை / குடும்பத்திற்கும் உதவுவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவ்வாறான உதவிகளுக்கு 0114354647 என்ற அவசர உதவி இலகத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

வறுமை காரணமாக மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காயை உட்கொண்ட செய்தி ஆதாரமற்றது ; ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு வறுமை காரணமாக மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காயை உட்கொண்ட செய்தி ஆதாரமற்றது  ; ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.