குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கு சோலார் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்... அமைச்சரவைப் பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டது.



குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சோலர் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 


500 மெகாவோட் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை தேசிய மின் சக்தி தொகுப்பில் சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.


இதற்காகப் பல்வேறு காரணங்களால் நிர்மாணப் பணிகள் பாதியில் நின்ற 69,000 வீடுகளில் 25,000 வீடுகள் தேர்வு செய்யப்பட்டன. அந்த வீடுகளின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பெனல்கள் மூலம் 20 கிலோவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதுடன் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரரிவித்தார்.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உதவியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் தற்போது பல்வேறு காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன்படி மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்;பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் அரச காணிகளில் கிராமங்களாக ஆரம்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 


இந்தத் திட்டம் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் சூரிய மின் தகடுகளின் பராமரிப்பு 20 ஆண்டுகளுக்கு முதலீட்டாளர்களால் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும் இந்தத் திட்டத்தின் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு அலகு மின்சாரத்திற்கு 0.116 அமெரிக்க டொலர்கள் முதலீட்டாளர்களுக்குச் செலுத்தப்படும். எஞ்சியுள்ள 13 ஆண்டுகளுக்கு ஒரு அலகு மின்சாரத்திற்கு 0.0816 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படும்.


சோலார் பெனல் திட்டம் மூலம் ஆண்டுக்கு 648 கிகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த செலவில் 116.64 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 வருட காலப் பகுதியில் 2,332.80 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி மதிப்பின் பெறுமதியை இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கு சேமிக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்

ஊடகப் பிரிவு


  


குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கு சோலார் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்... அமைச்சரவைப் பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கு சோலார் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்...  அமைச்சரவைப் பத்திரமும்  அங்கீகரிக்கப்பட்டது. Reviewed by Madawala News on September 29, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.