நாளாந்த மின்வெட்டு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிக்க படுகிறது.



நாளாந்த மின்வெட்டை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக நீடிக்குமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாளை 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இதனால் Groups A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, and W
குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் மின்வெட்டு இடம்பெறும் .

மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் .

பழைய லக்சபான ஸ்டேஜ் 1 செயலற்று இருப்பது , எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
நாளாந்த மின்வெட்டு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிக்க படுகிறது. நாளாந்த  மின்வெட்டு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிக்க படுகிறது. Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.