மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 10ஆவது உலக முதியோர் தினம் 2022
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், 10ஆவது தடவையாக உலக முதியோர் தினத்தை, ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9 மணிக்கு, மடவளை மதீனா தேசிய பாடசாலையின், அஷ்ர்ஃப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளது.
இவ்வைபவத்திற்குப் பிரதம் அதிதியாகக எமது ஊரைச்சேர்ந்த வைத்தியர் M.M.ஸியாத் அவர்களும், கௌரவ அதிதிகளாக பொறியியலாளர் M.Y.M.ஆசிர் (Ashir), கணக்காளர் M.P.V.G.M. ரி.ஃபாஸ் ஜப்பார் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
எனவே இவ்வைபவத்திற்குக் குறிப்பாக. எமது சங்கத்தின் சகல அங்கத்தவர்களையும், அங்கத்தவராவதற்கு தகுதி பெற்றவர்களையும், மடவளையிலுள்ள சகல சங்கங்கள், நிறுவனங்களின் நிருவாகக்குழு உறுப்பினர்களையும், எமது சங்கத்திற்கு நிதியுதவிய சகல அன்பளிப்பாளர்களையும், ஆதரவாளர்களையும் பொதுவாக சகல மடவளைவாசிகளையும் அன்பாய் அழைக்கின்றோம்.
தகவல் A.L.A.ஐலில்
செயலாளர் மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்:
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 10ஆவது உலக முதியோர் தினம் 2022.
Reviewed by Madawala News
on
September 30, 2022
Rating: