நீண்ட கால கனவு நிஜமாகிறது..., திகன ஹிஜ்ராபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சகல வசதிகளுடன் கூடிய கணினி அறை அபுதாலிப் சதகா நிறுவனத்தினால் அன்பளிப்பு.
திகன ஹிஜ்ராபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பல வருட காலமாக தேவையாக இருந்த
ICT Computer Room ஒன்று சகல வசதிகளுடன் கூடிய கணினி அறை அபுதாலிப் சதகா நிறுவனத்தினால் எதிர்வரும் 14-08-2022 ஞாயிற்றுக் கிழமை தினம் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.
மேற்படி விழாவுக்கு பிரதம அதிதியாக வளையக் கல்வி பனிப்பாளர், தெல்தெனிய திருமதி வை.எம். குமாரிஹாமி அவர்கள் கலந்து சிறப்பிப்பதுடன் விஷேட அதிதியாக அபுதாலிப் சதகா நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர். ரஸான் அவர்களும் மற்றும் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம், ஆரிப் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவ விருந்தினர்களாக மெததும்பர் பிரதேச சபை தலைவர் திரு. அசோக சமரகோன், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சீ.எம். நசீம். எம்.எப்.எம். பாசில், எஸ்.ஏ.எஸ். உபைதுல்லா, தெல்தெனிய பொலிஸ் நிலைய பிரதான அதிகாரி திரு. எஸ்.ஜீ.ஏ.ஆர்.எல். சேனாதீர, திகன மின்சார சபை தலைவர் திரு. வசந்த குனசேகர, மஹவெலி அதிகார சபை திரு. எச்.எம். ஹேரத், மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளி தலைவர் அல்ஹாஜ். எம்.எம்.எம். இஷாக், ஹிஜ்ராபுர அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா, அல்hஹாஜ் எம்.எச். எம் அனீஸ் அல்ஹாஜ் ரஸவி ஆர். ஹனீபா, அல்hஹாஜ் ஏ.எம். பர்ஹான், முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். இஹ்லாஸ் உற்பட பெற்றோர், பலைய மாணவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தகவல்
அல்ஹாஜ் ஏ.எச்.எம், ஆரிப்
செயலாளர்