நாட்டில் நிலவுகின்ற பலத்த மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையும் சாத்தியம்...



 நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பலத்த மழையுடனான வானிலை இன்று

முதல் படிப்படியாக குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.


சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களில்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும்  வடமேல் மாகாணங்களில்  மணித்தியாலத்திற்கு 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று  வீசக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் 

****************************


மேல் மற்றும் தென் கடல் பிராந்தியங்களில் நிலவுகின்ற காற்றுடனான வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நாட்டை சூழ உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து  தென் மேற்குத்  திசையை நோக்கி  காற்று வீசும். 


புத்தளம்  தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 


புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.


மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


ஆனபடியினால்  இக் கடல் பிராந்தியங்களுக்கு அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு  மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 


நாட்டில் நிலவுகின்ற பலத்த மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையும் சாத்தியம்... நாட்டில்  நிலவுகின்ற பலத்த மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையும் சாத்தியம்... Reviewed by Madawala News on August 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.