தனியார் பஸ்கள் நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலக தீர்மானம்



இன்று (04) நள்ளிரவு முதல் தனியார் பஸ் சேவையில் இருந்து விலகுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 


பேருந்துகளுக்கான டீசல் 40 லிட்டராக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து சேவையில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவியபோது.


சங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் உள்ளூர் பஸ் சேவையில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார். 


இந்த விடயத்திற்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ்கள் நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலக தீர்மானம் தனியார் பஸ்கள் நள்ளிரவு முதல்  சேவையில் இருந்து விலக தீர்மானம் Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.