வவுனியா, கண்டி, மாத்தறையில் திங்கள் முதல் 100 பேருக்கு 'ஒரு நாள் சேவை' கடவுச்சீட்டு



நாளை (04) திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா, கண்டி அலுவலகங்களில், முன்கூட்டியே பதிவு செய்த தலா 100 பேருக்கு 'ஒரு நாள் சேவை' கடவுச்சீட்டு வழங்கப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.


இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் 2022 ஜூலை மாதம் 04 ஆம் திகதி முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.


அதன் ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலும் முன்கூட்டியே நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரிகள் 100 பேருக்கு மாத்திரம் இந்தச் சேவை வழங்கப்படும்.


www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசித்து உரிய பிராந்திய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள முடியும்.


மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலம் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது விண்ணப்பதாரிகளுக்கு நாட்கள் மற்றும் நேரங்கள் வழங்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டியுள்ளது. எனவே, அந்த அலுவலகங்களில் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு முன்கூட்டியே நாளையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளாதவர்கள் சமூகமளிக்க வேண்டாமென தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.


மேலும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் 60 நாட்களுக்கான காலப் பகுதிக்கு திகதியும் நேரமும் ஒதுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. எனவே அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லவுள்ள விண்ணப்பதாரிகள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை 0706311711 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அ ப் (WhatsApp) செய்தி மூலம் அனுப்பிய பின்னர் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு விரைவில் நாளொன்றும் நேரமும் திணைக்களத்தினால் வழங்கப்படும். சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே துரிதமாக நாளொன்றும் திகதியும் வழங்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.


கட்டுப்பாட்டாளர் நாயகம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 

வவுனியா, கண்டி, மாத்தறையில் திங்கள் முதல் 100 பேருக்கு 'ஒரு நாள் சேவை' கடவுச்சீட்டு வவுனியா, கண்டி, மாத்தறையில் திங்கள் முதல் 100 பேருக்கு 'ஒரு நாள் சேவை' கடவுச்சீட்டு Reviewed by Madawala News on July 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.