பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எமது ஊர் மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உணவளிக்க வழியமைப்போம் i



பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எமது ஊர் மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உணவளிக்க வழியமைப்போம்.
=================================
எமது நாட்டில் தற்போது அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எமது ஏறாவூர் மக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே.


அந்த வகையில் எமது ஏறாவூரிலும் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு ஒருவேளை உணவையாவது உண்ணக் கொடுப்பது எமது கடமையெனக் கருதி எமது
*ஏறாவூர் சமூக நல அமைப்பு*

தம்மால் இயலுமான செயற் திட்டங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

அந்த வகையில் எமது இந்த செயற்திட்டத்துக்கு உதவ ஆர்வமுள்ள நல்லுள்ளங்களான; சமூக நலன் விரும்பிகள்,சமூக நலஆர்வலர்கள்,சமூக நல செயற்பாட்டாளர்கள்,தனவந்தர்கள்,கொடையாளிகள் என அனைவரும் தமது பங்களிப்புக்களையும் தந்துதவுமாறும் அவ்வாறு உங்கள் பங்களிப்புக்களை தருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழேயுள்ள இலக்கங்களில் ஒன்றில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜஷாகல்லாஹ் ஹைர்.

தொடர்புகளுக்கு:
0772092518,
0771802063,
0774691339,
0771171022

(அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்?.அவ்வாறு கொடுப்போருக்கு அல்லாஹ் அதனை பன்மடங்காக(திருப்பி) கொடுப்பான்.அவருக்கு மகத்தான கூலியும் உண்டு.அல்குர்ஆன் 57:11)
பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எமது ஊர் மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உணவளிக்க வழியமைப்போம் i பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எமது ஊர் மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உணவளிக்க வழியமைப்போம் i Reviewed by Madawala News on June 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.