திரில் வெற்றியுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி. I



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே
 கொழும்பு ஆர்.பிரேமதாச மைாதானத்தில் இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் குஹேனெமன், பெட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 259 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா சார்பாக டேவிட் வோனர் 99 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

அதற்கமைய, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 3இற்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதோடு, 1 போட்டி மீதமிருக்க தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரில் வெற்றியுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி. I திரில் வெற்றியுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி. I Reviewed by Madawala News on June 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.