நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக
இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தம்மிக்க பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாட்டிற்குப் பணி செய்யவே நான் இங்கு வந்தேன். நான் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னதாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளையும் வரி அனுமதி அறிக்கைகளையும் சபாநாயகரிடம் சமர்ப்பித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன். இப்போது என் கடமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான். அதை செய்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன். நல்லதொரு அமைச்சு கையளிக்கப்படும் என நினைக்கிறேன்- என்றார்.
மேலும் இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது முதலீட்டுச் சபைக்கு தலைமை தாங்கியதாகத் தெரிவித்த பெரேரா, தற்போதைய நெருக்கடிக்கும் தீர்வை வழங்குவதில் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
“மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நான் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டிற்குப் பணி செய்யவும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவுமே நான் பாராளுமன்றம் வந்தேன்
Reviewed by Madawala News
on
June 22, 2022
Rating: