கோல்பேஸ் ஆர்ப்பாட்டம் குடு காரர்களின் கூடாரமாக மாறிவிட்டது ..



காலி முகத்திடல் போராட்ட குழு தற்போது அதன் உண்மை நோக்கத்தை இழந்துள்ளதாகவும், நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள சில குண்டர்கள் மட்டுமே தற்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


போராட்டக்காரர்கள் அவர்களின் உண்மையான நோக்கங்களைக் கொண்டிருந்தால், IMF பிரதிநிதிகள் இங்கு வருகை தரும் போது அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலைத் தடுத்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் .


மேலும் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் ட்ரக் வண்டிகள் மூலம் அகற்றும் நடவடிக்கை அமெரிக்க தூதுவரின் தலையீட்டினால் வாபஸ் பெறப்பட்டதாகவும் ,காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை பாதிக்கும் என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்ட அமைச்சர் ஒருவரிடம் கூறியதாக விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

கோல்பேஸ் ஆர்ப்பாட்டம் குடு காரர்களின் கூடாரமாக மாறிவிட்டது .. கோல்பேஸ் ஆர்ப்பாட்டம் குடு காரர்களின் கூடாரமாக மாறிவிட்டது .. Reviewed by Madawala News on June 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.