2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை
திட்டமிட்டபடி மே மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மே 23 (திங்கட்கிழமை) முதல் ஜூன் 01 (புதன்கிழமை) வரை தேர்வு நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்தந்த அதிபர்களுக்கு அனுப்பப்படும் என்றும், தனிப்பட்ட தேர்வர்களின் பரீட்சை அட்டைகள் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 12 ஆம் தேதிக்குள் அனுமதி அட்டைகளை பெறாத தேர்வர்கள், தாமதமின்றி பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
பாடங்கள், மொழி அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்களைச் செய்ய வேண்டுமானால், மே 14ஆம் தேதி நள்ளிரவுக்கு முன், பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செய்துகொள்ளலாம்.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் அதிபர்கள் மூலம் இத்தகைய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
இதற்கிடையில், பரீட்சை கால அட்டவணையை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேலதிக விவரங்களுக்கு:
(0112 784208 / 0112 784537) அல்லது 1911
சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி இம்மாதம் நடைபெறும்.
Reviewed by Madawala News
on
May 11, 2022
Rating: