உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஓர் அதிகாரியே இருப்பதாகத் தெரிவிக்கும்
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சாபத்துக்கே நாட்டு மக்கள் முகங்கொடுக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஓர் அதிகாரியே இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் இந்த அதிகாரி வேறொரு பதவியில் இருந்தார்.
எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைகளுக்கு தேவையான நிதியை நான் திரட்டுவேன். பெயர் குறிப்பிட விரும்பாக அதிகாரி, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி இல்லை என்றால் அவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன் எனவும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஓர் அதிகாரியே இருப்பதாக சந்தேகிக்கிறேன்... I
Reviewed by Madawala News
on
May 26, 2022
Rating: