பிரதமரின் இல்லங்களைக்கூட எரிப்பது,
எம்.பி.க்களை கும்பலால் சுட்டுக் கொன்றது,
கலவரக்காரர்கள் கருணைக்கு தகுதியானவர்கள் அல்ல.
நமது சுற்றுப் புறத்தில் மற்றொரு லிபியாவை அனுமதிக்க முடியாது என
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையில் பதிவாகும் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்து மற்றொரு ட்விட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே நேற்று முன் தினம் தனது ட்விட்டர் பதிவில்,
“அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்திய ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும். தற்போது இந்திய எதிர்ப்பு வெளிநாட்டு சக்திகள் மக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது என ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.
நமது சுற்றுப் புறத்தில் மற்றொரு லிபியாவை அனுமதிக்க முடியாது.
Reviewed by Madawala News
on
May 11, 2022
Rating: