இன, மத விரோதத்தை நோக்கித் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு இலங்கையர்களை கோருகிறேன்: ஜனாதிபதி கோட்டாபய
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை
வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இன்று வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இன மற்றும் மத விரோதத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறும் அனைத்து இலங்கையர்களையும் நான் கோருகிறேன்
நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Metro
இன, மத விரோதத்தை நோக்கித் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு இலங்கையர்களை கோருகிறேன்: ஜனாதிபதி கோட்டாபய
Reviewed by Madawala News
on
May 11, 2022
Rating: