கட்சி அரசியலை புறக்கணித்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
நிலையை தீர்க்க அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சமகி ஜன பலவேகய (SJB) தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய பிரதமர், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைத்து, நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்ல, பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு எஞ்சியிருக்கும் ஒரே தெரிவு, இந்தப் புதிய அரசியல் பாதையில் கால் எடுத்து வைப்பதும், அனைவரின் சிறந்த திறனுக்கு ஏற்ப செயல்படுவதும் மட்டுமே என பிரதமர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும், நாட்டின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் தள்ளப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர், இலங்கையில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான கூட்டு முயற்சிக்கு ஆதரவளிப்பதை தேசியப் பொறுப்பாகக் கருதுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணிலிடம் இருந்து சஜித் பிரேமதாசவுக்கு கடிதம்!
Reviewed by True Nation
on
May 14, 2022
Rating: