வீரகெட்டிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் ஜனாஸா அடக்கம்



வீர­கெட்­டிவில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில்

 உயி­ரி­ழந்த எம்.எப்.எம். நபாயிஸ் (வயது 34) எனும் இளை­ஞரின் ஜனாஸா நேற்று முன்­தினம் இரவு யக்­கஸ்­முல்ல ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.


கடந்த திங்கட்கிழமை நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் ஆளும்­கட்சி அர­சி­யல்­வா­தி­களின் வீடுகள் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கின. இதன்­போது வீர­கெட்­டிய பிர­தேச சபைத் தலை­வரின் வீடும் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னது. இச் சம்­ப­வத்தை தமது கைய­டக்கத் தொலை­பே­சியில் புகைப்படம் எடுத்துக் கொண்­டி­ருந்­த­போது, நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்டில் சிக்­கியே இவர் உயி­ரி­ழந்­துள்ளார்.



இதே­வேளை இச் சம்­ப­வத்தில் இவ­ரது சகோ­த­ரரும் படு­கா­ய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எம்.எப்.எம்.நிஸ்லான் (வயது 28) எனும் இளை­ஞரே இவ்­வாறு படு­கா­ய­ம­டைந்து ஹம்­பாந்­தோட்டை பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.


வீர­கெட்­டிய, யக்­கஸ்­முல்­லையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட சகோ­த­ரர்­க­ளான இவர்கள் இரு­வரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்­படி வன்­முறைச் சம்­ப­வத்தை பார்­வை­யிடச் சென்­றுள்­ளனர். இதன்­போது மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்டு இருள் சூழ்ந்­துள்­ளது. இவர்கள் தமது கைய­டக்­கத்­தொ­லை­பே­சியின் பிளாஷ் வெளிச்­சத்தை ஒளிரச் செய்து படம் எடுத்­துள்­ளனர். இந் நிலையில் மறு­பக்­கத்தில் மறைந்­தி­ருந்­த­வர்கள் கைய­டக்கத் தொலை­பே­சியின் வெளிச்­சத்தை இலக்­காகக் கொண்டு துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யுள்­ளனர். இதனால் தலையில் நேர­டி­யாக துப்­பாக்கிக் குண்டு பாய்ந்­ததில் எம்.எப்.எம். நபாயிஸ் (வயது 34) உயி­ரி­ழந்­துள்ளார். சில்லறை வியாபாரியான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.


இவ­ரது சகோ­தரர் எம்.எப்.எம்.நிஸ்லான் (வயது 28) கழுத்தில் துப்­பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் ஆபத்­தான நிலையில் ஹம்­பாந்­தோட்டை வைத்­தி­ய­சா­லையின் அதி­தீ­விர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறார்.



இத­னி­டையே இத்­துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் அப் பிர­தே­சத்தைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த ஆசி­ரியர் ஒரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிசார் தெரி­விக்­கின்­றனர். மொத்­த­மாக இச் சம்­ப­வத்தில் இருவர் கொல்­லப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

வீரகெட்டிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் ஜனாஸா அடக்கம் வீரகெட்டிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் ஜனாஸா அடக்கம் Reviewed by True Nation on May 12, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.