தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு இன்று பிற்பகல் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு நெருக்கடியான நிலையில் இருப்பதால் பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதனை ஏற்காத நிலையில், பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் இன்று மாலை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் தான் வழங்கிய வாக்குறுதியை மீற முடியாது எனவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்து பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியாதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த கோத்தா .. ரனில் பிரதமராவது உறுதியானது
Reviewed by True Nation
on
May 12, 2022
Rating: