இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ்,
மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்புடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகியகாலக் கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி.
Reviewed by Madawala News
on
May 24, 2022
Rating: