இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை...


மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை

மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான  சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு சேதங்களை அல்லது இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

*************************


திருகோணமலை தொடக்கம்  மட்டக்களப்பு,பொத்துவில்  ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களில் சிறிதளவு  மழை  பெய்யக்கூடும். 


கொழும்பு  தொடக்கம் காலி, மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.  


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


கலாநிதி 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை...  இன்று  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை... Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.