மின்தடை குறித்து விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ; மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு
அண்மையில் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறுகள்
தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நேற்று (13) பிற்பகல் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையை வளாகத்தில் இரண்டு மின் நிலையங்களில் டீசல் இல்லாததால் பல பிரதேசங்களில் மின் துண்டிப்பு இடம்பெற்றிருந்தது.
இதன் காரணமாக 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மின்தடை குறித்து விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ; மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு
Reviewed by Madawala News
on
January 14, 2022
Rating: