பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது !!



பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சந்தேக நபர் காரில் இருந்து அவ்வழியாகச் சென்ற பாடசாலை மாணவிகளிடம் தனது அந்தரங்கப் பகுதியைக் காண்பித்ததாக தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மாணவிகள் தமது அதிபருக்கு அறிவித்ததையடுத்து அதிபர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது !! பாடசாலை மாணவிகள் இருவருக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது !! Reviewed by True Nation on January 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.