காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவெட
பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12) பிற்பகல் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது 13,300 வரியில்லா சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.
Reviewed by Madawala News
on
January 13, 2022
Rating: