கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பேருந்தை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.



கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளானதில், 4 சிறுவர்கள் உட்பட 6 பேர்

உயிரிழந்ததை அடுத்து, இன்று காலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியாவுக்கு பேருந்து சேவை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி கலீல் உல்லாஹ் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.


இந்தப் பேருந்து, காக்காமுனையிலிருந்து குறிஞ்சாக்கேணிக்கு இன்று காலை பயணித்த நிலையில், குறிஞ்சாக்கேணியில் வைத்து பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


இதன் காரணமாக குறித்த பேருந்து, குறிஞ்சாக்கேணியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


மிதப்பு பாலம் விபத்துக்குள்ளாகி ஆறு பேர் மரணித்தபின்னர், இந்தப் பேருந்து சேவை முன்னெடுக்கப்படுகின்றமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதற்கு முன்னர் இந்தப் பேருந்து சேவை ஏன் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி கலீல் உல்லாஹ் தெரிவித்தார்.


இந்த நிலையில், பேருந்து சேவையை முன்னெடுக்கும் அதிகாரிகள் தங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு அறியப்படுத்தியுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பேருந்தை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பேருந்தை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.