பப்ஜி கேம் விளையாட்டில் திளைத்திருந்த இளைஞன்
தூக்கிட்டு தற்கொலை.
மட்டக்களப்பு. சந்திவெளி பொலிஸ் பிரிவில் சம்பவம்.
சந்திவெளியை சேர்ந்த 17 வயதான இளைஞனே இவ்வாறு தூக்கிட்டு மரணித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் சம்பவ இடத்துக்கு சந்திவெளி பொலிசாருடன் நேரடியாக சென்ற பிரதேச மரண விசாரணை MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை தாயிடம் ஒப்படைத்தார்,
மேற்படி சம்பவம் 21/11 இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றதாக இளைஞனின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் தெரிவித்தனர்.
அதேவேளைமற்றுமொரு செய்தியாக, கரடியனாறு பிரதேசத்தில் 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமும் பதிவாகியுள்ளது.
பப்ஜி கேம் விளையாட்டில் திளைத்திருந்த இளைஞன் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை. #மட்டக்களப்பு
Reviewed by Madawala News
on
November 22, 2021
Rating: