இரசாயன உர தடை வர்த்தமானி ரத்து செய்யப்பட்டது... இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப் பட்டது.
இரசாயன உர தடை தொடர்பில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் இரத்து செய்யப்படுகிறது என :விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
இரசாயன உரத்தை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு தனியார் துறையினருக்கும் அனுமதி : இது குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் -
அதே வேளை எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யாது : இரசாயன உர பாவனைக்கு நிவாரணங்களும் வழங்கப்பட மாட்டாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மேலும் தெரிவித்தார்.
இரசாயன உர தடை வர்த்தமானி ரத்து செய்யப்பட்டது... இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப் பட்டது.
Reviewed by Madawala News
on
November 24, 2021
Rating: