எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை மீண்டும் முடக்கும் நிலை
உருவாகலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கான சுகாதார வழிகாட்டல்களை மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறைந்து வருகிறது. சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் இருக்கின்றனர்.
மீண்டுமொரு முடக்க தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும்.
எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் அதிர்ச்சியடைய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு மீண்டும் முடக்கப்படும்.
Reviewed by Madawala News
on
November 23, 2021
Rating: