என்.அஸ்சார்தின்
கடந்த 19 .10. 2021 மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு
நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹட்டன் ஜூம்மா பள்ளிவாயல் பெயரில் முத்திரை வெளியிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கொவிட் சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்நிகழ்வானது குறித்த தினத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் அலரி மாளிகையில் வைத்து இடம்பெற்றது.
இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள், பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹஸன் மௌலானா அவர்கள் மற்றும் இன்னும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
இம்முத்திரை வெளியீட்டு நிகழ்வானது ஹட்டன் பள்ளிவாயல் தலைவரும், நுவரெலியா மாவட்டத்தின் வக்பு சபை தலைவருமான அல்ஹாஜ் A.L.M பஷீர் ஹாஜியார் மற்றும் ஹட்டன் நகர சபையின் உப தலைவர் A.L.M பாமிஸ் ஹாஜியார் தலைமை ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற முத்திரை (ஹட்டன் ஜூம்மா பள்ளிவாயல்) வெளியீட்டு நிகழ்வு.
Reviewed by Madawala News
on
October 24, 2021
Rating: