உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் ரிஷாட்
பதியுதீன் எம்.பி. மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சாட்சி இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) சபையில் கோரிக்கை முன்வைத்தாா்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காபவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றாா்.
அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் சாட்சி இருக்குமாக இருந்தால் அதனை சமர்பிக்க வேண்டும். சாட்சி இல்லாவிட்டால் அவர் மீதான விசாரணை நிறைவு செய்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரியச் சாட்சிகள் இருந்தால் அவற்றை உறுதிப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்
குற்றச்சாட்டுகளுக்குச் சாட்சி இல்லாவிட்டால் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுங்கள்.
Reviewed by Madawala News
on
October 04, 2021
Rating: