கண்டி மக்களுக்கு இன்று முதல் ஸ்புட்னிக் v தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்..



கண்டி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின்
 இரண்டாவது டோஸ் இன்று முதல் வழங்கப்படுகிறது.

இதற்காக நேற்றைய தினம் மொஸ்கோவிலிருந்து ஸ்புட்னிக் தடுப்பூசியின் 120,000 டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாட்களுக்குள் கண்டி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி விநியோகிக்கப்படுவதுடன், இந்த வார இறுதிக்குள் இந்த தடுப்பூசி செலுத்தல் நடவடிக்கை பூர்த்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 159,089 நபர்கள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 43,453 நபர்கள் மட்டுமே இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர்.
கண்டி மக்களுக்கு இன்று முதல் ஸ்புட்னிக் v தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்.. கண்டி மக்களுக்கு இன்று முதல் ஸ்புட்னிக் v தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்.. Reviewed by Madawala News on September 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.