இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன உரிமத்தின் கீழ் புதிய
எரிவாயு நிறுவனமொன்று ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தாண்டு இறுதிக்குள் “லங்கா கேஸ்” என்ற பெயரில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயுவை பயன்படுத்தி புதிய நிறுவனத்தை தொடங்குவதற்கு Ceypetco எதிர்பார்க்கிறது.
இந்த புதிய நிறுவனத்தின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதோடு, இதன் மூலமாக எதிர்காலத்தில் நாட்டின் 20 சதவீத எரிவாயு தேவையை பூர்த்திசெய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உருவாகிறது “லங்கா கேஸ்” புதிய உள்நாட்டு எரிவாயு நிறுவனம்.
Reviewed by Madawala News
on
September 20, 2021
Rating: