சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், ஆலயமொன்றின் குருக்களை கைது செய்ய போலீசார் வலைவீச்சு.
குளியாபிட்டி-போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து
ஆலயமொன்றின் குருக்கள் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆலயத்தின் குருக்கள் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.
மகளின் காதல் தொடர்பை முறிப்பதற்காக போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ஆம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான குறித்த குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், கடந்த சில தினங்களாக ஆலயமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தகவல் : சிவா ராமசாமி
சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், ஆலயமொன்றின் குருக்களை கைது செய்ய போலீசார் வலைவீச்சு.
Reviewed by Madawala News
on
August 02, 2021
Rating: