VIDEO : நான் நபிகள் நாயகம் பற்றி பேஸ்புக்கில் இழிவாக பதிவு போடவே இல்லை.... கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர்.
என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே
இது. எனக்கும் நபிகள் நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.இந்த ஊடக மாநாடு நேற்று (30) பிற்பகல் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அவர் மேலும் கூறியதாவது:
கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர். அவரை அவமதித்ததாக என்னைத் தொடர்புபடுத்தி முகநூலில் சில பிரகிருதிகள் படுகேவலமாக விமர்சித்து வருகின்றனர்.
போலி முகநூல் பதிவை எனது பெயரில் பதிவிட்டு தூற்ற ஆரம்பித்துள்ளனர். அதையிட்டு கவலைப்படவில்லை.
ஆனால் இறைதூதரின் பெயரைப் பயன்படுத்தி தூற்றுவதையிட்டே கவலையடைகிறேன். வெறும் அரசியலுக்காக அந்த மாமனிதரை கொச்சைப்படுத்த வேண்டாம். எந்த மதமானாலும் எந்த இறைவனாலும் பொதுவெளியில் இவ்வாறு செய்யக் கூடாது.
சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணில் பிறந்த நாங்கள் என்றும் ஏனைய மதங்களை மதித்து நடப்பவர்கள். மனிதத்தை போற்றுபவர்கள். இன ஐக்கியத்துடன் செயற்படுபவர்கள்.
இன, மதம் கடந்து சேவையாற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவன் நான்.
எனவே தயவுசெய்து யாரும் அரசியலுக்காக தெய்வங்களை இழுத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள்.