ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் புனித ஹஜ் பெருநாள் விருந்துபசார நிகழ்வு
(28) பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் தலைமையில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இடம் பெற்றது.குறித்த விருந்துபசாரமானது புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு சக முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.மூவினங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள் இங்கு கடமையாற்றி வருகிறார்கள். சமூக இன நல்லிணக்கத்திற்கான ஒரு வெளிப்பாடாக இது பார்க்கப்படுகிறது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிர்வாக உத்தியோகத்தர் உடகெதெர , சமுர்த்தி தலைமை முகாமையாளர் சித்திக் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதேச செயலகத்தில் புனித ஹஜ் பெருநாள் விருந்துபசார நிகழ்வு... ஒரு சமூக நல்லிணக்க வைபவம்.
Reviewed by Madawala News
on
July 31, 2021
Rating: