ஈஸ்டர் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை காவல்துறை மற்றும் உளவுத்துறையை இந்தியா எச்சரித்து
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ரணில் விக்ரமசிங்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் காவல்துறை மற்றும் உளவுத்துறையை இந்தியா எச்சரித்ததாக கூறினார்.
இருப்பினும் உளவுத்துறை தகவல்களைப் பொறுத்தவரை காவல்துறை செயல்படத் தவறிவிட்டது என்றார்.
மேலும் ஈஸ்டர் ஞாயிறு தேவாலய நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தனது தந்தை தனக்கு அறிவுறுத்தியதாக அப்போதைய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தன்னிடம் கூறியதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை காவல்துறை மற்றும் உளவுத்துறையை இந்தியா எச்சரித்து
Reviewed by Madawala News
on
July 19, 2021
Rating: