உரிய ஆவணங்கள் இருந்தால் மாத்திரமே நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கலாம்.


 

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், மேலும் 245 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில்

கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 50,994 ஆக அதிகரித்துள்ளது.


மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி, மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த 293 பேரை, அவர்கள் பயணித்த 139 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கலாம்.


எனினும், இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணங்கள் இருந்தால் மாத்திரமே நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கலாம்.  உரிய ஆவணங்கள் இருந்தால் மாத்திரமே  நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக  மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கலாம். Reviewed by Madawala News on July 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.