சி.எல்.சிசில்)
கதிர்காமம் மஹா தேவாலயத்தின் எசல பெரஹராவில் பங்கேற்ற நடனக் குழுவின் 15
உறுப்பினர்களும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலேயே இது கண்டறியப்பட்டது.
காலி பகுதியைச் சேர்ந்த 11பேரும் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 4 பேருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான நடனக் கலைஞர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பவும் அவர்களுடன் தொடர்பிலிருந்தோரை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எசல பெரஹராவில் பங்கேற்ற நடனக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கொரோனா தொற்று.
Reviewed by Madawala News
on
July 19, 2021
Rating: