இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவு.
இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான
இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோகன அபேவிக்ரம இன்று (30) தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
அத்துடன் பாலியல் இணையத்தளங்கள், அத்தகைய இணையத்தளங்களில் பெயர்களை பதிவு செய்தல், பணம் செலுத்துதல் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இணையம் மூலம் சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவு.
Reviewed by Madawala News
on
July 30, 2021
Rating: