கொழும்பில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்... கைது செய்யப்படுவாரா கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரின் மகன்??




கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரின் மகனை காதலித்து வந்த வெளிநாட்டு யுவதியொருவர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுற்றுலா விஸா மூலம் நேபாளத்தில் இருந்து வருகைத்தந்து, களியாட்ட விடுதியில் பணியாற்றி வந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன்னாள் அமைச்சரின் மகன் இந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துப்படுத்திய முன்னாள் அமைச்சரின் மகன், குறித்த பெண் பணியாற்றிய களியாட்ட விடுதிக்கும் அவர் தங்கியிருந்த வீட்டுக்கும் அவ்வப்போது வந்து சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் சடலம் இதுவரையில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரின் மகனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில், அவரைக் கைது செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Siva Ramasamy
Thamilan
கொழும்பில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்... கைது செய்யப்படுவாரா கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரின் மகன்?? கொழும்பில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்... கைது செய்யப்படுவாரா கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரின் மகன்?? Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.