ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ராசெனேகா கொரோனா
தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இந்நிலையில், மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அஸ்ட்ரா சேனிகா முதலாவது மருந்தளவை (DOSE) பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது மருந்தளவு நாளை முதல் செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
கொழும்பு − விஹாரமஹா தேவி பூங்காவில் நாளைய தினம் அஸ்ட்ரா சேனிகா இரண்டாவது மருந்தளவை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.
அத்துடன், விஹாரமஹா தேவி பூங்கா மற்றும் தியட்ட உயன ஆகிய இடங்களில் நாளை மறுதினம் (02) அஸ்ட்ரா சேனிகா இரண்டாவது மருந்தளவை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து 728,460 எஸ்ட்ராசெனேகா கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன..
Reviewed by Madawala News
on
July 31, 2021
Rating: