20 க்கு கை உயர்த்திய எமது வக்கற்ற அரசியல்வாதிகளால் கல்முனை RDHS பிராந்தியத்திற்கு ஒரு தடுப்பூசியை கூட பெற்றுத்தர முடியவில்லை.
- ஏ.பி.எம்.அஸ்ஹர்-
கல்முனை RDHS பிராந்திய 0% கொரோனா தடுப்பூசி;வக்கற்ற அரசியலின்
குறியீடு என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அம்பாரையின் சனத்தொகையும் ஹம்பாந்தோட்டை சனத்தொகையும் ஏறத்தாள சமமானவை. ஆனால்;
ஹம்பாந்தோட்டையில் 45% கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுவிட்டது.
அம்பாரையில் வெறும் 07% மட்டுமே கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதை நாமல் ராஜபக்ஷவே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
அதில், முஸ்லிம், தமிழர்கள் செறிந்து வாழும் கல்முனை RDHS பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டமை பூச்சியம்% என்பதே இதிலுள்ள சுவாரசியமான விடயம்.
மில்லியன் கணக்கில் தடுப்பூசிகள் வந்திறங்கியும் கல்முனை RDHS பிராந்தியத்திற்கு 0 வீதம் எனின் - அதற்கு காரணங்கள்;
ஒன்று அப்பட்டமான பாராமுகமும் இனவாதமும்
மற்றையது வக்கற்ற அரசியல்வாதிகள்
20க்கு கையுயர்த்திய நமது செயல் வீரர்கள்; கல்முனை RDHS பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்குமாறு பிரதமரை சந்தித்து உடன் ஓடர் போட வைத்ததாகவும் - அவசரமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும்
கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதி தமது முகநூலிலும்
அதே மாதம் 10 ஆம் தினகரன் பத்திரிகையின் முன்பக்கத்திலும் - மக்களை ஏமாற்றும் படங்காட்டுவதற்காக செய்தி போட்டிருந்தனர்.
ஆனால், சரியாக ஒரு மாதம் கழித்து அதாவது இந்த மாதம் 09ஆம் திகதி - ஜனாதிபதி தலைமையில் எந்த எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகளை வழங்குவதென தீர்மானித்து - பட்டியலும் வெளியானது. அதில் ஒன்றுகூட கல்முனை RDHS பிராந்தியத்திற்கு (அம்பாரை) வழங்கப்படுவதாக தீர்மானிக்கப்படவில்லை.
(ஆதாரம் கீழே )
இந்த வக்கற்ற அரசியல்வாதிகளால் - மில்லியன் கணக்கில் அரசினால் கொண்டுவரப்பட்டு ஏற்றப்படும் தடுப்பூசிகளில் - ஒன்றை கூட நமக்காக பெற்றுத் தர முடியாது எனின் - இவர்களால் வேறு என்னதான் முடியப்போகிறது?
20க்கு கையுர்த்தி - நமது உடலையும் உயிரையும் அடமானம் வைத்து விட்டனர். அதனை முன்பு ஜனாஸா எரிப்பில் கண்டோம். இன்று தடுப்பூசி விடயத்தில் காண்கிறோம். இதுதான் நிஜம்.