அமெரிக்காவினால் இலங்கைக்கு நட்புக்காகவே 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன... அதற்கு பணம் செலுத்த தேவையில்லை.
(நா.தனுஜா)
நண்பர்கள் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகளைச் செய்வதைப்போன்றே
அவசியமான மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.இது இலங்கை மக்களுக்கான அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக எந்தவொரு நபரும் பணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின்கீழ் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் பிரத்யேக விமானமொன்றின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தன.
இதுகுறித்து இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினால் இலங்கைக்கு நட்புக்காகவே 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன... அதற்கு பணம் செலுத்த தேவையில்லை.
Reviewed by Madawala News
on
July 19, 2021
Rating: