''சிப்தொர'' புலமைப் பரிசில் வேலைத்திட்டத்தின் படி 124 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 1500 ரூபா இரண்டு ஆண்டுகளுக்கு உதவி.
- ஏ.பி.எம்.அஸ்ஹர்-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் சிப்தொர புலமைப் பரிசில் வேலைத்திட்டத்திற்காக
க.பொ.சாதாரன பரீட்சையில் சித்தி பெற்று க.பொ.உயர்தரம் படிக்கின்ற 124 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 1500.00 இரண்டு ஆண்டுகளுக்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்., தமீம் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், சமூர்த்தி முகாமைத்துவ, திட்ட முகாமையாளர், மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
''சிப்தொர'' புலமைப் பரிசில் வேலைத்திட்டத்தின் படி 124 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 1500 ரூபா இரண்டு ஆண்டுகளுக்கு உதவி.
Reviewed by Madawala News
on
July 20, 2021
Rating: